Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நகை வியாபாரியிடம் ரூ.ஒன்றரை கோடி கொள்ளை சம்பவம்; மேலும் 3 பேர் கைது

நகை வியாபாரியிடம் ரூ.ஒன்றரை கோடி கொள்ளை சம்பவம்; மேலும் 3 பேர் கைது

By: Nagaraj Tue, 14 Feb 2023 04:53:54 AM

நகை வியாபாரியிடம் ரூ.ஒன்றரை கோடி கொள்ளை சம்பவம்; மேலும் 3 பேர் கைது

சென்னை: நகை வியாபாரியிடம் ஒன்றரை கோடி ரூபாய் கொள்ளையடித்த விவகாரத்தில், மேலும் 3 பேரை சென்னை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 2-ஆம் தேதி, யானை கவுனி பகுதிக்கு நகை வாங்க வந்த இருவரை வழிமறித்து, போலீஸ் எனக்கூறி ஒன்றரை கோடி ரூபாயை மர்ம கும்பல் ஒன்று கொள்ளையடித்தது.

5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்ற நிலையில், ஹவாலா, குருவி கும்பலை குறிவைத்து கொள்ளையடிக்கும், இம்ரான் மற்றும் அவரது கூட்டாளிகள் கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

investigation,jeweler,privates,arrest ,
விசாரணை, நகை வியாபாரி, தனிப்படையினர், கைது,

இதனையடுத்து, ஆலந்தூரில் இம்ராஸ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்திய தனிப்படையினர், அவரளித்த தகவலின்படி, நீலகிரி, சேலம், கர்நாடகாவில் பதுங்கியிருந்த இம்ரான், இம்தியாஸ், பாஷா ஆகியோரை கைது செய்தனர்.

மூவரிடம் இருந்து 60 லட்ச ரூபாய் பணத்தை மீட்ட தனிப்படையினர், மீதமுள்ள பணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :