ரோம் - டில்லி இடையே நேரடி விமான சேவை... இந்திய பயணிகளுக்காக தொடக்கம்
By: Nagaraj Mon, 05 Dec 2022 5:17:57 PM
இத்தாலி: இத்தாலிய தலைநகர் ரோம் – புது தில்லி இடையே நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்திய பயணிகளை இத்தாலிக்கு அழைத்து வருவதற்காக இந்த புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கும் இத்தாலிக்கும் இடையிலான தொடர்புகளை மேம்படுத்துகிறது. இத்தாலியின் ஏர் டிரான்ஸ்போர்ட் (ஐடிஏ) கடந்த 3ம் தேதி முதல் இத்தாலிய தலைநகர் ரோம் – புது தில்லி இடையே நேரடி விமானத்தை தொடங்கியது.
அதிக இந்திய பயணிகளை இத்தாலிக்கு அழைத்து வருவதற்காக இந்த புதிய சேவையை
விமான நிறுவனம் தொடங்கியுள்ளது. இதுகுறித்து, இந்தியாவுக்கான இத்தாலிய
தூதர் வின்சென்ட் டெலூகா கூறுகையில், “டெல்லி மற்றும் ரோம் இடையேயான
இத்தாலி விமானப் போக்குவரத்து (ஐடிஏ) நேரடி விமானம் இந்தியாவுக்கும்
இத்தாலிக்கும் இடையேயான தொடர்புக்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கிறது.
இந்திய பயணிகளை இத்தாலிக்கு அழைத்து வருவதற்காக இந்த புதிய சேவை தொடங்கியது.