Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவால் உயிரிழந்த டெல்லி மருத்துவர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி - அரவிந்த் கெஜ்ரிவால்

கொரோனாவால் உயிரிழந்த டெல்லி மருத்துவர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி - அரவிந்த் கெஜ்ரிவால்

By: Karunakaran Mon, 29 June 2020 2:47:18 PM

கொரோனாவால் உயிரிழந்த டெல்லி மருத்துவர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி - அரவிந்த்  கெஜ்ரிவால்

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. மத்திய அரசின் உதவியுடன் டெல்லி அரசு இணைந்து கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

டெல்லியில் நேற்று ஒரே நாளில் 2,889 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 83,077 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஒரே நாளில் 65 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதால், அங்கு கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 2,623 ஆக உயர்ந்துள்ளது.

delhi,coronavirus,corona death,arvind kejriwal ,டெல்லி, கொரோனா வைரஸ், கொரோனா மரணம், அரவிந்த் கெஜ்ரிவால்

இந்நிலையில் எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் பணியாற்றிய மயக்க மருந்து நிபுணர், மூத்த மருத்துவர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உயிரிழந்த மருத்துவர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். மேலும், கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அவர், தலைநகர் டெல்லியில் விரைவில் பிளாஸ்மா வங்கி தொடங்கப்படும். கொரோனா சிகிச்சையில் இருந்து குணமடைந்தோர் தாமாக முன் வந்து பிளாஸ்மா சிகிச்சைக்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags :
|