Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.5,000 வழங்க வேண்டும்; முத்தரசன் பேட்டி

ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.5,000 வழங்க வேண்டும்; முத்தரசன் பேட்டி

By: Monisha Sat, 31 Oct 2020 08:38:03 AM

ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.5,000 வழங்க வேண்டும்; முத்தரசன் பேட்டி

வத்திராயிருப்பு என்ற பகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி எழுதிய "எனது அரசியல் பயணம்" என்ற நூலின் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு நூலை வெளியிட்டார்.

விழாவில் தாமரை இதழ் ஆசிரியர் மகேந்திரன், முன்னாள் எம்.பி.க்கள் அழகிரிசாமி, லிங்கம், ஒன்றிய பெருந்தலைவர் சிந்து முருகன், தி.மு.க. நகர ஒன்றிய மாவட்ட பிரதிநிதிகள் மல்லி ஆறுமுகம், குன்னூர் சீனிவாசன், முனியாண்டி, அய்யாவு பாண்டியன், அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் அழகர்சாமி, காங்கிரஸ் கட்சியின் ஒன்றிய பொறுப்பாளர் மணி கோவிந்தன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வத்திராயிருப்பு தாலுகா செயலாளர் கோவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ration card,diwali,relief,nool,communist party of india ,ரேஷன் கார்டு,தீபாவளி,நிவாரண தொகை,நூல்,இந்திய கம்யூனிஸ்டு கட்சி

விழா முடிந்த பின்னர் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்கள் தங்களுக்கு போதுமான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் வருகிற தீபாவளிக்கு நிவாரண தொகையாக ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.5,000 வழங்க வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடங்கினால் என்ன பிரச்சினை ஏற்படும் என்று தெரிந்தும் முதல்-அமைச்சர் உரிய நடவடிக்கைகளை எடுக்காததால் ஒரு நாள் இரவில் பெய்த மழை சென்னையை சீரழித்து உள்ளது. எனவே மழைநீர் வடிய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|
|
|