Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆர் எஸ் பாரதி கைது, போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏக்கள், வழக்கறிஞர்கள்

ஆர் எஸ் பாரதி கைது, போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏக்கள், வழக்கறிஞர்கள்

By: Karunakaran Sat, 23 May 2020 10:18:58 AM

ஆர் எஸ் பாரதி கைது, போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏக்கள், வழக்கறிஞர்கள்

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர் எஸ் பாரதி, இட ஒதுக்கீடு என்பது திமுக போட்ட பிச்சை எனவும் அதனால் இப்போது ஒடுக்கப்பட்ட மக்கள் நீதிபதியாக இருப்பதாகவும் பேசினர். அவரின் இந்த பேச்சு பலத்த சர்ச்சைகளை எழுப்பிய நிலையில் பல அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

இது சம்மந்தமாக மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை அவர் வீட்டில் வைத்து காவலர்கள் அவரைக் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கட்சியினர் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

rs bharti,dmk mlas,arguing,police,lawyers,rs bharthi arrest ,திமுக, ஆர் எஸ் பாரதி, வக்கீல்கள், வாக்குவாதம், போலீஸ்

சென்னையில் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் தற்போது கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணை நிறைவு பெற்றுள்ளதாக தெரிகிறது.

விசாரணைக்கு பின் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன ஆர்.எஸ்.பாரதி ஆஜர்படுத்தப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும், கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதியை பார்க்க அனுமதிக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திமுக எம்.எல்.ஏக்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|