- வீடு›
- செய்திகள்›
- 20 கோடி பெண்களின் வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டது; மத்திய அமைச்சர் தகவல்
20 கோடி பெண்களின் வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டது; மத்திய அமைச்சர் தகவல்
By: Nagaraj Sun, 17 May 2020 3:02:12 PM
கடைசி கட்ட சிறப்பு திட்டங்கள்... 20 கோடி பெண்களின் வங்கிக்கணக்கில் ரூ.10 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தன்னிறைவு இந்தியாவின் திட்டத்தில் கடைசி கட்ட சிறப்பு திட்டங்களை வெளியிட்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
நாடு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது. இக்கட்டான சூழலாக இருந்தாலும், இது நமக்கு ஒரு வாய்ப்பு என பிரதமர் கூறியுள்ளார். நிலம், தொழிலாளர், பணப்புழக்க சட்டங்கள் குறித்து கவனம் செலுத்தியுள்ளோம். சரக்குகளை கையாள்வதில் உள்ள சிரமங்களை போக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். ஊரடங்கு காலத்தில் பசியில் உள்ளவர்களுக்கு உணவு வழங்குவது நமது கடமை.
Tags :
farmers |
women |
bankers |