Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இடைத் தேர்தலில் ஆளும் கட்சியினர் துஷ்பிரயோகம்; செங்கோட்டையன் குற்றச்சாட்டு

இடைத் தேர்தலில் ஆளும் கட்சியினர் துஷ்பிரயோகம்; செங்கோட்டையன் குற்றச்சாட்டு

By: Nagaraj Tue, 14 Feb 2023 04:56:50 AM

இடைத் தேர்தலில் ஆளும் கட்சியினர் துஷ்பிரயோகம்; செங்கோட்டையன் குற்றச்சாட்டு

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் கட்சியினர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணன் உன்னியிடம் அதிமுகவினர் புகார் மனு அளித்துள்ளனர்.

கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கடந்த பத்தாம் தேதி தேர்தல் நடத்தை விதிகளை மீறி துவக்கப்பள்ளிக்குள் சென்று வாக்கு சேகரித்தார்.

allegation,former minister,dmk side,action ,குற்றச்சாட்டு, முன்னாள் அமைச்சர், திமுக தரப்பு, நடவடிக்கை,

இது தொடர்பாக கடந்த 11ம் தேதி புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து திமுக தரப்பில் இருந்து இதுவரை எவ்வித அறிக்கையும் வெளியாகவில்லை.

மேலும் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் ஆளுங்கட்சிக்கு இணக்கமாக செயல்படுவதாகவும் மனுவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Tags :