Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா குண்டு வீசியதாக வெளியான தகவல்

உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா குண்டு வீசியதாக வெளியான தகவல்

By: Nagaraj Thu, 31 Aug 2023 7:37:00 PM

உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா குண்டு வீசியதாக வெளியான தகவல்

கீவ்: உக்ரைன் தலைநகர் மீது ரஷியா குண்டு வீச்சு... ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இதற்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதற்கிடையில், இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. மேலும் உக்ரைனுக்கு பொருளாதார உதவி மற்றும் ஆயுதங்களை வழங்குகிறது. மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது.

bomb,capital,russia,ukraine ,உக்ரைன், குண்டு, தலைநகர், ரஷியா, வீச்சு

இதற்கிடையில், இன்று காலை, உக்ரைன் தலைநகர் கீவ் மீது வானிலிருந்து குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவத்தில் 2 பேர் பலியானதை கீவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார். கட்டிட இடிபாடுகளில் உயிரிழந்தவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், வெடிகுண்டு தாக்குதலில் கண்ணாடி உடைந்ததில் ஒருவர் காயமடைந்ததாகவும் மேயர் கிளிட்ச்கோ தெரிவித்தார்.

இந்த குண்டுவெடிப்பில் பல கட்டிடங்கள் எரிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வான்வழித் தாக்குதல் ஆளில்லா விமானங்களா அல்லது வேறு வகைகளில் இருந்து வந்ததா என்பது உறுதி செய்யப்படவில்லை என்றும் கிளிட்ச்கோ கூறினார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து வருவதால் வான்வழித் தாக்குதல்கள் தளர்த்தப்பட்டன.

Tags :
|
|