Advertisement

இந்தியா சீனா இடையிலான மோதல் குறித்து ரஷியா கவலை

By: Karunakaran Thu, 18 June 2020 2:13:07 PM

இந்தியா சீனா இடையிலான மோதல் குறித்து ரஷியா கவலை

சமீபத்தில் லடாக் எல்லையில் இந்திய-சீன படையினரிடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மோதலை தடுத்தனர். இருப்பினும் அங்கு பதற்றம் நிலவியது. இந்நிலையில் மீண்டும் லடாக் எல்லையில் சீனா ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனா ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது. இதில் சீன வீரர்கள் 43 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனா ராணுவத்தின் இந்த திடீர் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஐ.நா பொதுச்செயலாளர் வருத்தம் தெரிவித்தார். அமெரிக்காவும் இந்திய வீரர்களின் மரணத்திற்கு வருத்தத்தை தெரிவித்தது. இந்நிலையில் இந்தியா சீனா இடையிலான மோதல் குறித்து ரஷியா கவலை தெரிவித்துள்ளது.

india-china,russia,clash,boundary of ladakh ,இந்தியா சீனா,ரஷியா,மோதல்,லடாக் எல்லை

இதுகுறித்து ரஷிய அதிபர் புதினின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், இந்திய சீன எல்லையில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் மிகுந்த கவனத்துடன் உற்று நோக்கி வருகிறோம். இரு நாட்டு வீரர்களின் மோதல் மிகவும் ஆபத்தானது என்று நாங்கள் கருதுகிறோம் என்று தெரிவித்துள்ளார். இந்தியா சீனா இடையிலான மோதல் கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலையை தடுக்கவும், எல்லையில் ஸ்திரத்தன்மை இருப்பதை உறுதி செய்யவும் இரு நாடுகளும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வல்லவை என்று நாங்கள் கருதுகிறோம். மேலும் இந்த பிரச்சினையை இரு நாடுகளும் தாங்களாவே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|
|