Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகளாவிய பேரழிவுக்கான போரை ரஷ்யா நடத்தி வருகிறது: உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு

உலகளாவிய பேரழிவுக்கான போரை ரஷ்யா நடத்தி வருகிறது: உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு

By: Nagaraj Thu, 03 Aug 2023 11:35:56 PM

உலகளாவிய பேரழிவுக்கான போரை ரஷ்யா நடத்தி வருகிறது: உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு

உக்ரைன்: உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு... உலகளாவிய பேரழிவுக்கான போரை ரஷ்யா நடத்தி வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.

உக்ரைன்-ருமேனியா எல்லை வழியாக ஓடும் டானுபே ஆற்றின் அருகே உள்ள இஸ்மாயில் துறைமுகம் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலால் ஏற்றுமதிக்கு தயாராக இருந்த உக்ரைனின் 40 ஆயிரம் டன் தானியங்கள் சேதமடைந்தன.

food famine,ukraine,granary,russia,will ,உணவு பஞ்சம், உக்ரைன், தானியக்கிடங்கு, ரஷ்யா, விருப்பம்

இதனை சுட்டிக்காட்டி வீடியோ வெளியிட்டுள்ள ஜெலென்ஸ்கி, சர்வதேச உணவு சந்தையில் பொருட்களின் விலை உயர்ந்து, உணவு விநியோகம் பாதிக்கப்பட வேண்டும் என்பதே ரஷ்யாவின் விருப்பம் என்று கூறியுள்ளார்.

உக்ரைனுடனான கருங்கடல் தானிய ஒப்பந்தத்தை புதுப்பிக்க ரஷ்யா மறுத்துவிட்டதால், உக்ரைனில் உள்ள தானிய கிடங்குகளில் லட்சக்கணக்கான டன் தானியங்களை ஏற்றுமதி செய்ய முடியாமல், ஆப்ரிக்க நாடுகளில் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|