உக்ரைனில் இலக்குகளை நோக்கி ரஷ்யா சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல்
By: Nagaraj Wed, 07 Dec 2022 12:05:21 PM
உக்ரைன்: உக்ரைன் முழுவதும் உள்ள இலக்குகளை நோக்கி ரஷ்யா சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
முக்கியமாக கிழக்கில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு குறிப்பிடத்தக்க இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கில், ஒடேசா மின்சாரம் இல்லாமல் உள்ளது. மேலும் இந்த தாக்குதல்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
ஆனால், கடந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு வந்த இந்த ஏவுகணை தாக்குதல்கள், முந்தைய சந்தர்ப்பங்களில் இருந்ததை விட குறைவான சேதத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
ரஷ்யா வீசிய 70 ஏவுகணைகளில் 60 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன்
தெரிவித்துள்ளது. ஆனால், திட்டமிடப்பட்ட 17 இலக்குகளையும் தாக்கியதாக ரஷ்யா
கூறுகிறது. ரஷ்யாவின் இந்த தாக்குதல்கள், அண்டை நாடான மால்டோவாவில்
மின்சார விநியோகத்தை பாதித்துள்ளதாக, உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர்
ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிற்குள் இரண்டு விமானத்
தளங்களில் நடத்தப்பட்ட தொடர்ச்சியான வெடிப்பு சம்பவங்களுக்கு சில
மணிநேரங்களுக்குப் பிறகு உக்ரைன் மீதான இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.