Advertisement

உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா கடும் ஏவுகணை தாக்குதல்

By: Nagaraj Sat, 29 Apr 2023 11:30:06 AM

உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா கடும் ஏவுகணை தாக்குதல்

உக்ரைன்: 26 பேர் உயிரிழப்பு... உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் 26 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 2 மாதங்களில் நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல் ஆகும். தற்போது பக்முத் நகரை தொடர்ந்து உமன் நகரில் ரஷ்ய படைகள் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றன.

buildings,umannagar,attack,smoke,rescue operations,ruins ,கட்டிடங்கள், உமன்நகர், தாக்குதல், புகை மூட்டம், மீட்புபணிகள், இடிபாடுகள்

ரஷ்ய ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் இங்கு குழந்தைகள் உள்ளிட்ட 26 பேர் பலியாகி உள்ளனர். தாக்குதலில் இடிந்து கிடக்கும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பக்முத் நகரை போலவே உமன் நகர் மீதும் தாக்குதல் நடைபெறுவதால் கட்டிடங்கள் சேதமடைந்து இருப்பதுடன் புகை மூட்டமாக காணப்படுகிறது.

Tags :
|
|