Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உக்ரைனின் ஆளில்லா விமான தாக்குதலில் முறியடித்ததாக ரஷ்யா தகவல்

உக்ரைனின் ஆளில்லா விமான தாக்குதலில் முறியடித்ததாக ரஷ்யா தகவல்

By: Nagaraj Mon, 17 July 2023 7:21:59 PM

உக்ரைனின் ஆளில்லா விமான தாக்குதலில் முறியடித்ததாக ரஷ்யா தகவல்

ரஷ்யா: உக்ரைன் அரசு கிரிமியா தீபகற்பம் அருகே 7 வான்வழி ஆளில்லா விமானங்கள் மற்றும் 2 நீருக்கடியில் ட்ரோன்கள் மூலம் தீவிரவாத தாக்குதலை நடத்தியது. இதை முறியடித்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் கடந்த பிப்ரவரியில் இருந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இருப்பினும், போர் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், கருங்கடல் பகுதியில் உள்ள செவஸ்டோபோல் துறைமுகம் மீதான தாக்குதல் தடுக்கப்பட்டுள்ளது.
எண்ணற்ற வான்வழி மற்றும் நீருக்கடியில் ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், உக்ரைன் அரசு இன்று காலை கிரிமியா தீபகற்பம் அருகே 7 வான்வழி ஆளில்லா விமானங்கள் மற்றும் 2 நீருக்கடியில் ட்ரோன்கள் மூலம் தீவிரவாத தாக்குதலை நடத்தியது.
அந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில் உயிரிழப்போ அல்லது பாதிப்புகளோ எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்து உள்ளது. இவற்றில் 2 ஆளில்லா விமானங்கள், கடலோர பகுதியில் இருந்து சற்று தொலைவில் கருங்கடல் மீது சுட்டு வீழ்த்தப்பட்டன.
5 ஆளில்லா விமானங்கள் ரஷியாவின் மின்னணு போர் படைகளை கொண்டு இடைமறிக்கப்பட்டு வீழ்த்தப்பட்டன. 2 ஆளில்லா விமானங்கள் கருங்கடலின் வடபகுதியில் கண்டறியப்பட்டு, நெருப்பு கொண்டு அழிக்கப்பட்டன என அமைச்சகம் தெரிவித்து உள்ளது. எனினும் இதற்கு உக்ரைன் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை.

8 drones,attack,interception,terrorism,ukraine ,உக்ரைன், தாக்குதல், பயங்கரவாதம், 8 ஆளில்லா விமானங்கள், முறியடிப்பு

அந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில் உயிரிழப்போ அல்லது பாதிப்புகளோ எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்து உள்ளது. இவற்றில் 2 ஆளில்லா விமானங்கள், கடலோர பகுதியில் இருந்து சற்று தொலைவில் கருங்கடல் மீது சுட்டு வீழ்த்தப்பட்டன.

5 ஆளில்லா விமானங்கள் ரஷியாவின் மின்னணு போர் படைகளை கொண்டு இடைமறிக்கப்பட்டு வீழ்த்தப்பட்டன. 2 ஆளில்லா விமானங்கள் கருங்கடலின் வடபகுதியில் கண்டறியப்பட்டு, நெருப்பு கொண்டு அழிக்கப்பட்டன என அமைச்சகம் தெரிவித்து உள்ளது. எனினும் இதற்கு உக்ரைன் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை.

Tags :
|