Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீசியம் தனிமம் வாங்க முயன்ற 5 பேரை கைது செய்ததாக ரஷ்யா தகவல்

சீசியம் தனிமம் வாங்க முயன்ற 5 பேரை கைது செய்ததாக ரஷ்யா தகவல்

By: Nagaraj Fri, 23 June 2023 8:24:51 PM

சீசியம் தனிமம் வாங்க முயன்ற 5 பேரை கைது செய்ததாக ரஷ்யா தகவல்

ரஷ்யா: சீசியம் தனிமத்தை வாங்க முயற்சி... உக்ரைனியர் ஒருவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க கதிரியக்க அபாயம் கொண்ட சீசியம் தனிமத்தை வாங்க முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் ஜப்போர்ஷியா அணுமின் நிலையத்தில், கதிர்வீச்சு ஏற்படும் அளவிற்கு தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுவருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அண்மையில் தெரிவித்திருந்தார்.

investigation,russian intelligence,counterfeiting,ukrainian,nuclear power plant ,விசாரணை, ரஷ்ய உளவுத்துறை, கள்ளச்சந்தை, உக்ரைனியர், அணுமின் நிலையம்

அதே சமயம், அணுமின் நிலையம் மீது தாக்குதல் நிகழ்த்த உக்ரைன் திட்டமிட்டுவருவதாக ரஷ்யாவும் பதிலுக்கு குற்றம்சாட்டியது.

இந்நிலையில், உக்ரைனியர் ஒருவருக்காக கள்ளச்சந்தையில் ஒரு கிலோ சீசியமை 29 கோடி ரூபாய்க்கு வாங்க முயன்ற 5 பேரை கைது செய்து விசாரணை நடத்திவருவதாக ரஷ்ய உளவுத்துறை தெரிவித்துள்ளது.

Tags :