கணவரை விவாகரத்து செய்துவிட்டு வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட ரஷிய பெண்
By: Karunakaran Thu, 16 July 2020 07:47:24 AM
ரஷியாவைச் சேர்ந்த மரினா பால்மாஷேவா என்ற பெண்ணை இன்ஸ்டாகிராமில் 4,20,000 பேர் பின்தொடர்கின்றனர். இவர் கடந்த மே மாதம் 7 வயது சிறுவனுடன் இருக்கும் படத்தையும், அதன்பின் 20 வயதாகிய அந்த பையனை கட்டிப்பிடித்து நிற்பது போன்ற படத்தையும் வெளியிட்டிருந்தார்.
இந்த படத்திற்கு ஆதரவான கருத்து வரும் என மரினா பால்மாஷேவா நினைத்திருந்தார். ஆனால் எதிர்மறையான கருத்துகளே வந்தது. இருப்பினும், அதைப்பற்றி கவலைப்படாமல் மரினா, கடந்த வாரம் அந்த வாலிபரை திருமணம் செய்து கொண்டார். அதன்பின், தனது இன்ஸ்டாகிராமில் வாலிபர் தனது வளர்ப்புப் பையன் என்று தெரிவித்துள்ளார். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
35 வயதாகும் மரினா 2007-ம் ஆண்டு தனது 22 வயதில் அலெக்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அலெக்சிக்கு ஐந்து மகன்கள். அதில் 2-வது மகன் விலாடிமிர் ஷவ்ரின். அப்போது விலாடிமிர்க்கு 7 வயது. 10 ஆண்டுகளுக்குப்பின் அலெக்சியிடம் இருந்து விவாகரத்து வாங்கிவிட்டார். அதன்பின், மரினா, விலாடிமிர் மற்றும் அவனது சகோதரர்கள் மூன்று பேருடன் வசித்து வந்தநிலையில், விலாடிமிர் மீது மரினாவுக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்பின் இதுகுறித்து விலாமிரிடம் மரினா தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். விலாமிரும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்பின் விலாடிமிர் உடன் இணைந்து குழந்தை பெற்றெடுக்க விரும்பி மரியா தற்போது கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் குழந்தை பிறப்பதற்கு முன், ரிஜிஸ்டர் அலுவலகம் சென்று திருமணம் செய்து கொண்டனர்.
இதுகுறித்து மரினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், திருமணம் முடிந்த பிறகு திருமண ஆடை அணிந்து சந்தோசமாக அருகில் உள்ள ரெஸ்டாரன்டில் விருந்தினர்களுடன் வரவேற்பை கொண்டாடினோம். தற்போது நாங்கள் குழந்தையை எதிர்பார்த்துக் கெண்டிருக்கிறோம்.
முன்னாள் கணவரிடம் நாங்கள் பேசுவதில்லை. நாங்கள் திருமணம் செய்ததை அவர் விரும்பவில்லை என்று நினைக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர், வாழ்க்கை எப்படி திரும்பும் என்று உங்களுக்கு தெரியாது. ஒரு நபரை சந்திக்கும்போது, உங்களை மகிழ்ச்சியுடைவராக உருவாக்கும். சிலர் எதிர்ப்பார்கள். சில ஆதரிப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால், நாங்கள் மிகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.