ஜனாதிபதி ஆணைக்குழு பொலிஸ் பிரிவில் முன்னிலையானார் ருவான்
By: Nagaraj Tue, 18 Aug 2020 4:30:02 PM
ஆணைக்குழுவில் முன்னிலையானார்... ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு பொலிஸ் பிரிவில், முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன முன்னிலையாகி இருந்தார்.
இன்று அவர் ஆணைக்குழுவில் முன்னிலையிலையாகி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் இன்று முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
குறித்த அழைப்புக்கு அமையவே அவர் இன்று ஆணைக்குழுவில்
முன்னிலையாகியிருந்தார். இதேவேளை, அரச புலனாய்வுத் துறையின் முன்னாள்
பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேனவை எதிர்வரும் ஓகஸ்ட் 26 ஆம் திகதி, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்
குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில்
முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.