Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கட்சியை தொடர்ந்து நடத்துவேன்; எஸ்ஏ சந்திரசேகர் திட்டவட்டம்

யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கட்சியை தொடர்ந்து நடத்துவேன்; எஸ்ஏ சந்திரசேகர் திட்டவட்டம்

By: Monisha Thu, 19 Nov 2020 11:02:15 AM

யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கட்சியை தொடர்ந்து நடத்துவேன்; எஸ்ஏ சந்திரசேகர் திட்டவட்டம்

இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் கடந்த சில நாட்களுக்கு முன்னர், விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த கட்சியில் தன்னுடைய ரசிகர்கள் யாரும் இணைய வேண்டாம் என விஜய் ஏற்கனவே அறிக்கை விட்டு இருந்ததை அடுத்து விஜய் ரசிகர்கள் இந்த கட்சியை கண்டு கொள்வதில்லை

இந்த நிலையில் எஸ்.ஏ.சி கட்சியின் தலைவர் என அறிவிக்கப்பட்ட பத்மநாபன் மற்றும் பொருளாளர் என அறிவிக்கப்பட்ட ஷோபா சந்திரசேகர் ஆகிய இருவருமே கட்சியிலிருந்து விலகி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் கட்சியை தொடர்ந்து நடத்துவேன் என்றும் எஸ்.ஏ.சி சந்திரசேகர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியுள்ளார்.

sa chandrasekhar,politics,party,intimidation,antiswimming ,எஸ்ஏ சந்திரசேகர்,அரசியல்,கட்சி,மிரட்டல்,எதிர்நீச்சல்

சென்னை வடபழனியில் இன்று நடைபெற்ற கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் தனது கட்சியிலிருந்து தலைவரே விலகியது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த போது கூறியதாவது:-

"யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கட்சியை தொடர்ந்து நடத்துவேன் என்று கூறினார். மேலும் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் போது மிரட்டல் வரும் என்று தனக்கு தெரியும் என்றும் பதிலளித்தார். மேலும் நான் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக எப்போதுமே இருந்ததில்லை. எதிர்நீச்சல் போடுவதை தான் விரும்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|