சதான் உசேன் கதி தான் டொனால்ட் ட்ரம்புக்கும் ஏற்படும்; ஈரான் அதிபர் எச்சரிக்கை
By: Nagaraj Fri, 25 Dec 2020 10:46:13 AM
சதான் உசேன் கதி தான் டொனால்ட் ட்ரம்புக்கும் ஏற்படும் என்று ஈரான் அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபர் ஆன பிறகு அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமான மோதல் போக்கு அதிகரித்தது.
ஒபாமா காலத்தில் கொண்டு வரப்பட்ட ஈரான் அனு சக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய ட்ரம்ப் ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்தார். ஈரான் இராணுவ தளபதி சுலைமானியை கொலை செய்ய உத்தரவிட்ட ட்ரம்ப் ஈரானை தொடர்ந்து பகைத்து வந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியிற்று ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதனால் ஈரானுடனான மோதல் போக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தற்போது சதாம் உசேனுக்கு ஆன கதி தான் ட்ரம்புக்கும் ஏற்படும் என்று ஈரான் அதிபர் ஹசன் ரௌஹானி தெரிவித்துள்ளார்.
ஈரான்
இரண்டு மூடர்களை எதிர்கொண்டுள்ளது. ஒருவர் சதாம் உசேன், மற்றொருவர்
ட்ரம்ப். சதாம் ஈரான் மீது போர் தொடுத்தார். ட்ரம்ப் ஈரான் மீது பொருளாதார
யுத்தத்தை நடத்தி வருகிறார்.
சதாம் தான் செய்த குற்றங்களுக்கான விளைவை அனுபவித்தார். ட்ரம்ப்பும் அதே நிலையை எதிர்கொள்வார் என்று தெரிவித்துள்ளார் ரௌஹானி.