Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாதுகாப்பான உணவு பொருட்கள்; சீனாவில் இயங்கும் பெப்சி கிளை நிறுவனம் தகவல்

பாதுகாப்பான உணவு பொருட்கள்; சீனாவில் இயங்கும் பெப்சி கிளை நிறுவனம் தகவல்

By: Nagaraj Wed, 24 June 2020 9:54:54 PM

பாதுகாப்பான உணவு பொருட்கள்; சீனாவில் இயங்கும் பெப்சி கிளை நிறுவனம் தகவல்

பெப்சி கிளை நிறுவனம் அறிவிப்பு... தங்கள் நிறுவனத்தின் குளிர்பானங்கள் மற்றும் சிற்றுண்டி பொருட்கள் பாதுகாப்பானவை என, சீனாவில் உள்ள பெப்சியின் கிளை நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வீசப்படுவதாக கூறப்படும் நிலையில், பீஜிங்கில் உள்ள பெப்சி நிறுவனத்தின் உணவு பதப்படுத்தும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த தகவல் நுகர்வோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியைதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நிறுவனத்தின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

testing,security,pepsi,china,announcement ,பரிசோதனை, பாதுகாப்பு, பெப்சி, சீனா, அறிவிப்பு

இதனிடையே, நோய்த்தொற்று பரவல் அதிகரித்துள்ள பீஜிங்கில் உணவு வினியோக நிறுவனங்கள், உணவகங்கள் ஆகியவற்றின் ஊழியர்களை குறிவைத்து அதிக அளவிலான பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு உலக அளவில் அதிக அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில் சீனாவில் மீண்டும் கொரோனா பரவி வருவதால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இம்முறை எவ்வித அறிகுறிகளும் இல்லாமல் சிலருக்கு கொரோனா பரவி உள்ளது.

Tags :
|
|