பாதுகாப்பான பயணம் மக்களின் உரிமை... முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டவட்டம்
By: Nagaraj Sun, 04 June 2023 12:31:44 PM
உத்தரபிரதேசம்: முதல்வர் யோகி ஆதித்யநாத் தகவல்... பாதுகாப்பான பயணம் என்பது ஒவ்வொரு குடிமக்களின் உரிமை என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
சாலைப் பயணங்கள் பாதுகாப்பாக இருப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
93 புதிய ராஜதானி பேருந்து மற்றும் 7 புதிய பேருந்து சேவைகளை கொடியசைத்துத் தொடங்கி வைத்து பேசிய யோகி உத்தரப்பிரதேசத்தில் அதிகரித்து வரும் சாலைவிபத்துகளின் எண்ணிக்கை குறித்து கவலை தெரிவித்தார்.
மூன்று ஆண்டுகளில் கோவிட்டால் பறிபோன உயிர்களை விட ஓராண்டில் சாலை விபத்துகளில் அதிகமான உயிர்களை இழந்திருப்பதாகக் கூறினார். ஒவ்வொரு உயிரும் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் முக்கியமானது என்றும் யோகி தெரிவித்தார்.