இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலை சஹ்ரான் தாக்குதல் நடத்த காரணம்; விசாரணை அதிகாரி தகவல்
By: Nagaraj Sun, 31 May 2020 4:47:03 PM
நியூசிலாந்தில் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பழி தீர்க்கவும், ஐஎஸ் அமைப்பினால் இலங்கையில் உள்ள இஸ்லாமியர்களை கவர வேண்டும் என்பதற்காகதான் சஹ்ரான் தாக்குதல்களுக்காக இலங்கையை தெரிவு செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இலங்கையை தாக்குதல் இலக்காக சஹ்ரான் ஹாசிம் தெரிவு செய்தமைக்கான காரணங்களை பயங்கரவாத தடுப்பு பிரிவின் அதிகாரி ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியமளித்த இந்த அதிகாரி, 2019இல் நியூசிலாந்தில் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பழி தீர்க்கவும், ஐஎஸ் அமைப்பினால் இலங்கையில் உள்ள இஸ்லாமியர்களை கவரவுமே சஹ்ரான் தாக்குதல்களுக்காக இலங்கையை தெரிவு செய்ததாக குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அன்று தெஹிவளையில் குண்டை வெடிக்கவைத்து தாக்குதல் நடத்தியவர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரியே இந்த சாட்சியத்தை வழங்கினார்.