Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஐக்கிய மக்கள் சக்தி செயற்குழுவில் ரஞ்சன் இணைக்கப்பட உள்ளதாக சஜித் அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி செயற்குழுவில் ரஞ்சன் இணைக்கப்பட உள்ளதாக சஜித் அறிவிப்பு

By: Nagaraj Sun, 28 Aug 2022 09:28:10 AM

ஐக்கிய மக்கள் சக்தி செயற்குழுவில் ரஞ்சன் இணைக்கப்பட உள்ளதாக சஜித் அறிவிப்பு

கொழும்பு: ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் தகவல்... ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றின் மூலம் சஜித் பிரேமதாச இதனை கூறியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றக் குழுவில் உறுப்பினராகவும் இணைக்கப்படுவார் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ranjan,corruption,people,court,criticism,prison,forgiveness ,ரஞ்சன், ஊழல், மக்கள், நீதிமன்றம், விமர்சனம், சிறை, மன்னிப்பு

அத்தோடு தமது கட்சி ஊழல் எதிர்ப்பு முயற்சிக்கு ரஞ்சன் ராமநாயக்க தலைமை தாங்குவார் என சஜித் பிரேமதாச பதிவிட்டுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ், சிறையில் வாடிய ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க நிபந்தனையுடன் மன்னிப்பு வழங்கியிருந்தார்.

அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டாலும், நீதிமன்றத்தை விமர்சிக்கவோ, இன்னும் 7 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவோ முடியாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தான் சுயாதீனமாக, மக்கள் பக்கம் இருந்து ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கப்போவதாக ரஞ்சன் ராமநாயக்க கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|
|