Advertisement

இந்த மாவட்டத்தில் நாளை மது விற்பனைக்கு தடை

By: vaithegi Sat, 29 Oct 2022 2:11:08 PM

இந்த மாவட்டத்தில் நாளை மது விற்பனைக்கு தடை

தூத்துக்குடி: நாளை மது விற்பனைக்கு தடை ..... தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அவர்கள் அறிவித்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா நாளை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது.

இதேபோன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை நடைபெறவுள்ளது.

எனவே இதனையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அவர்கள் அறிவித்துள்ளார்.

madhu,thoothukudi ,மது ,தூத்துக்குடி

இதனை அடுத்து அன்றைய தினம், தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு மதுபானக் கடைகளும், மதுபானக் கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் மது பானம் விற்பனை, மது பானத்தை கடத்துதல், அவற்றை பதுக்கி வைத்தல் போன்றவை கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

Tags :
|