Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷியாவின் ‘ஸ்புட்னிக் 5’ தடுப்பூசியை இந்தியாவின் டாக்டர் ரெட்டி ஆய்வகங்களுக்கு விற்பனை

ரஷியாவின் ‘ஸ்புட்னிக் 5’ தடுப்பூசியை இந்தியாவின் டாக்டர் ரெட்டி ஆய்வகங்களுக்கு விற்பனை

By: Karunakaran Wed, 16 Sept 2020 5:53:24 PM

ரஷியாவின் ‘ஸ்புட்னிக் 5’ தடுப்பூசியை இந்தியாவின் டாக்டர் ரெட்டி ஆய்வகங்களுக்கு விற்பனை

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவுக்கு எதிராக பல்வேறு உலக நாடுகள் தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. பல நாடுகள் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து இறுதிக்கட்ட பணியில் உள்ளன. அந்த வகையில் ரஷியாவின் கமாலயா நிறுவனம் ‘ஸ்புட்னிக் 5’ என்ற தடுப்பூசியை தயாரித்து உள்ளது.

இந்நிலையில் 3-வது கட்ட மனித பரிசோதனைக்கு தயாராகி வரும் ‘ஸ்புட்னிக் 5’ என்ற தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக மத்திய அரசின் தேசிய கொரோனா தடுப்பூசி நிபுணர் குழு தலைவரும், நிதி ஆயோக் உறுப்பினருமான டாக்டர் வி.கே.பால் தெரிவித்திருந்தார். இந்த தடுப்பூசி தற்போது ரஷியாவில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

russia,sputnik 5,dr reddys laboratory,india ,ரஷ்யா, ஸ்பூட்னிக் 5, டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம், இந்தியா

தற்போது ரஷியாவின் ஸ்புட்னிக் 5 தடுப்பூசி இந்தியாவுக்கு விற்பனைக்கு வருகிறது.இந்தியாவில் ஒழுங்குமுறை ஒப்புதல் கிடைத்தவுடன் கொரோனாவுக்கு எதிராக இந்தியாவின் டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்களுக்கு 100 மில்லியன் டோஸ் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி வழங்கப்படும் என ரஷியாவின் நேரடி முதலீட்டு நிதியம் தெரிவித்துள்ளது.

மேலும், ரஷிய நேரடி முதலீட்டு நிதியம் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசி விநியோகத்திற்கு இந்திய நிறுவனத்துடன் ஒத்துழைக்க ஒப்புக் கொண்டதாக கூறி உள்ளது. அதன்படி, ‘ஸ்புட்னிக் 5’ தடுப்பூசி இந்தியாவிற்கு வந்தவுடன் அவை விரைவில் பரிசோதிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரலாம்.

Tags :
|