Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருநெல்வேலி பொதுச்சந்தையில் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன

திருநெல்வேலி பொதுச்சந்தையில் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன

By: Nagaraj Sun, 13 Dec 2020 3:31:28 PM

திருநெல்வேலி பொதுச்சந்தையில் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன

பிசிஆர் பரிசோதனை... யாழ்ப்பாணத்தில் பிரதான சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலி பொதுச் சந்தையில் 39 பேரிடம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.

நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய எழுமாறாக 39 பேரிடம் மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. மருதனார்மடம் பொதுச் சந்தையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கொத்தணி ஏற்பட்டுள்ள நிலையில் திருநெல்வேலி சந்தையில் உள்ள வியாபாரிகள் உள்ளிட்ட 39 பேரிடம் இன்று மாதிரிகள் பெறப்பட்டுள்ளன

இந்த மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

corona,pcr examination,individual interval,charge ,கொரோனா, பிசிஆர் பரிசோதனை, தனிமனித இடைவெளி, குற்றச்சாட்டு

இதனையடுத்து, கடந்த ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஆயிரத்து 349 பேர் கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முகக்கவசம் அணியாமை, தனி மனித இடைவெளியைப் பேணாமை உட்பட தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தனிமைப்படுத்தல் விதிமுறைகளையும் சுகாதாரப் பிாிவினரால் வழங்கப்படும் அறிவுரைகளையும் பின்பற்றும்படியாக பொலிஸ் தலைமையகம் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Tags :
|