கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக சரத்பவார் அறிவிப்பு
By: Nagaraj Tue, 02 May 2023 11:39:11 PM
மும்பை: பதவியிலிருந்து விலகல்... தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக சரத் பவார் அறிவித்துள்ளார்.
சரத் பவாரின் சுயசரிதை வெளியீட்டு விழா நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. அப்போது பதவி விலகலை அறிவித்த சரத் பவார், பொது வாழ்க்கையில் தொடர்ந்து நீடித்தாலும், தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்று தெரிவித்தார்.
சரத் பவாருக்கும், அவரது அண்ணன் மகன் அஜித் பவாருக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சரத்பவார் தனது அறிவிப்பை திரும்பப்பெறக்கோரி மகராஷ்டிராவின் பல இடங்களில் அவரது கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags :
party |