இலங்கையில் சேலைகள் விலை மிகவும் உயர்ந்தது
By: Nagaraj Wed, 02 Nov 2022 11:03:21 PM
இலங்கை: இலங்கையில் சேலை வகைகளின் விலைகளும் பெரியளவில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இது பொதுமக்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையில் தற்போது அதிகரித்துள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பொருட்களின் விலைகள் பல மடங்காக உயர்ந்துள்ளன. இவ்வாறு அதிகரித்த விலைகளுள் பெண்கள் உடுக்கும் புடவைகளும் அடங்கும். இவற்றுள் சேலை வகைகளின் விலைகளும் பெரியளவில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்போது சேலை விலைகளும் அதிகரித்துள்ளதால் சேலையை கட்டுவதிலும் ஒசரியை
கட்டுவதிலும் ஆசிரியைகள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளனர்.
அவர்களுக்கு மாற்று ஆடையை அணிவது தொடர்பில் கவனம் செலுத்துமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்து கொண்டுள்ளது.
Tags :
sudden |