Advertisement

சிதம்பரம் கோயிலில் சிறப்பாக நடந்த செங்கோல் வழிபாடு

By: Nagaraj Sun, 28 May 2023 7:22:53 PM

சிதம்பரம் கோயிலில் சிறப்பாக நடந்த செங்கோல் வழிபாடு

சிதம்பரம்: சிதம்பரம் கோயிலில் செங்கோல் வழிபாடு... புதுடில்லியில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில், பிரதமர் நரேந்திரமோடியால் செங்கோல் வைக்கப்பட்டதை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயில் செங்கோல் வழிபாடு நடைபெற்றது.

புதுதில்லியில் கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் 1947ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் திருவாவடுதுறை ஆதினத்தால், பண்டித நேருக்கு அளிக்கப்பெற்ற செங்கோல் தற்போது பிரதமர் நரேந்திரமோடியால் நிறுவப்பட்டுள்ளது.

scepter,special worship,devotees,sweets,chidambaram ,செங்கோல், சிறப்பு வழிபாடு, பக்தர்கள், இனிப்பு, சிதம்பரம்

இதனை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயில் உள்ள தொன்று தொட்டு உள்ள செங்கோலுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கோயில் பொதுதீட்சிதர்களின் செயலாளர் டி.எஸ்.சிவராம தீட்சிதர், உ.வெங்கடேச தீட்சிதர், சம்பந்த தீட்சிதர், ராஜா தீட்சிதர் உள்ளிட்டோர் பங்கேற்று இந்தியாவில் தர்மத்தின் ஆட்சியான செங்கோல் ஆட்சி நிலைக்கட்டும் என உறுதிமொழி ஏற்றனர்.

நிகழ்ச்சியில் கோளறு பதிகம் பாடி செங்கோலுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு பக்தர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

Tags :
|