Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை

By: vaithegi Mon, 22 Aug 2022 4:19:40 PM

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை

கேரளா: கடந்த 2 வருடங்களாகவே கொரோனா பெருந்தொற்று காரணமாக ஓணம் பண்டிகை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்துள்ளதால் ஓணம் பண்டிகையை மிக சிறப்பாக கொண்டாட வேண்டுமென்று கேரள அரசு முடிவு செய்துள்ளது.

எனவே இதனால் செப்டம்பர் 6 ஆம் தேதி கனகக்குன்னு அரண்மனை மைதானத்தில் உள்ள நிஷா காந்தி திறந்தவெளி அரங்கில் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த பிரம்மாண்ட விழாவில் முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொள்ள இருக்கிறார்.

school,college,onam festival,holidays ,பள்ளி, கல்லூரி,ஓணம் பண்டிகை,விடுமுறை

இதனால் இந்த பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளா முழுவதும் ஆகஸ்ட் 20ம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என்று பொதுக் கல்வித் துறை தெரிவித்தது.

மேலும் ஓணம் விடுமுறைக்கு முன்னதாக ஆசிரியர்கள் நிலுவையில் உள்ள பாடப்பகுதிகளை முடிக்க வேண்டும் என்பதால், அனைத்து பள்ளிகளுக்கும் சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம், கனமழை காரணமாக பள்ளிகள் பல நாட்கள் மூடப்பட்டன. எனவே, பெரும்பாலான பள்ளிகள் முதல் பருவத் தேர்வுக்கு முன் நிலுவையில் உள்ள பாடத்திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு ஆகஸ்ட் 24-ம்(நாளை மறுநாள்) தேதி தொடங்குகிறது என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Tags :
|