Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாணவர்களின் விளையாட்டு நேரத்தில் மற்ற வகுப்புகள் எடுக்கக் கூடாது .. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

மாணவர்களின் விளையாட்டு நேரத்தில் மற்ற வகுப்புகள் எடுக்கக் கூடாது .. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

By: vaithegi Fri, 16 Dec 2022 7:08:36 PM

மாணவர்களின் விளையாட்டு நேரத்தில் மற்ற வகுப்புகள் எடுக்கக் கூடாது   ..   பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: மாணவர்கள் விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும் .... தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களின் படிப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து கொண்டு வருகிறது. அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம், இலவச நோட்டு புத்தகங்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

மேலும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளி மாணவ மாணவிகள் இருக்க வேண்டும் என்பதால் ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்கள் மூலமாக இலவச ஆங்கில பயிற்சி வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.

இதனை அடுத்து அந்த வரிசையில் மாணவர்கள் விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது பொதுவாக பள்ளிகளில் விளையாட்டு நேரங்களில் ஆசிரியர்கள் தங்களது வகுப்புகளை எடுப்பார்கள்.

ஆனால் இனி மாணவர்களின் விளையாட்டு நேரங்களில் மற்ற வகுப்புகளை எடுக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது பற்றி மாநில கல்வி கொள்கை குழுவினரின் முழு அறிக்கை ஜனவரியில் முதல்வரிடம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags :