Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆசிரியர்களின் போராட்டம் குறித்து பள்ளி கல்வி துறை அமைச்சர் கருத்து தெரிவிப்பு

ஆசிரியர்களின் போராட்டம் குறித்து பள்ளி கல்வி துறை அமைச்சர் கருத்து தெரிவிப்பு

By: vaithegi Sun, 08 Oct 2023 1:08:34 PM

ஆசிரியர்களின் போராட்டம் குறித்து பள்ளி கல்வி துறை அமைச்சர் கருத்து தெரிவிப்பு

சென்னை: ஆசிரியர்களின் கோரிக்கைக்கு ஆதரவு ... தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 2009-ம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதன்பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

எனவே இதனை எதிர்த்து ஆசிரியர்கள் போராடி கொண்டு வருகின்றனர். ஊதிய முரண்பாட்டை களைய இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் பல நாட்களுக்காக நீட்டித்து கொண்டு வருகிறது.

school education minister,opinion,teachers struggle ,பள்ளி கல்வி துறை அமைச்சர் ,கருத்து ,ஆசிரியர்களின் போராட்டம்

இந்த நிலையில் திருச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் அன்பில் பொய்யாமொழி ஆசிரியர்கள் போராட்ட நிகழ்வு பற்றி விளக்கம் அளித்துள்ளார். அதில் ஆசிரியர்களின் போராட்டத்தை தவறாக நினைக்கவில்லை எனவும், அவர்களின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

மேலும் அவர் ஆசிரியர்கள் தங்களை வருத்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் எனவும் ஆசிரியர்களும் பள்ளி கல்வித்துறையும் உறவினர்கள் போன்றவர்கள் எனவும் நிகழ்ச்சியில் பேசி உள்ளார்.

Tags :