உத்தரப்பிரதேசத்தில் வருகிற 9ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை
By: vaithegi Tue, 07 Mar 2023 3:33:46 PM
உத்தரப்பிரதேசம்: வட மாநிலத்தில் பிரமாண்டமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஹோலி பண்டிகையாகும். இந்த பண்டிகையானது பங்குனி மாதத்தின் கடைசி முழு நிலவு நாளன்று கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இந்தா ண்டு மார்ச் 7,8,9 ஆகிய தேதிகளில் ஹோலி பண்டிகையானது வட மாநிலங்களில் வெகு விமர்சையாக நடைபெற இருக்கிறது.
அதனால் வட மாநில அரசுகள் பள்ளிகளுக்கும், அரசு அலுவலகத்திற்கும் விடுமுறை பற்றிய அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், மகாராஷ்டிராவில் மார்ச் 6,7-ம் தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து உத்தரபிரதேச மாநிலத்திலும் ஹோலி பண்டிகை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. எனவே அதன்படி ஏற்கனவே வருகிற மார்ச் 7, 8 ஆகிய தேதிகளில் ஹோலி பண்டிகை காரணமாக பொது விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது மார்ச் 9ம் தேதி அன்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஹோலி பண்டிகை காரணமாக விடுமுறை அளிக்கப்படுவதாக உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.