பள்ளி மாணவிகளுக்கு விஷம்... எதிரிகளின் சதி திட்டம் என விமர்சனம்
By: Nagaraj Mon, 06 Mar 2023 10:27:53 PM
டெஹ்ரான்: எதிரிகளின் சதி திட்டம்... பள்ளி மாணவிகளுக்கு விஷம் கொடுத்தது குழப்பத்தை ஏற்படுத்த எதிரிகளின் சதி திட்டம் என ஈரான் அதிபர் இப்ராகிம் ரெய்சி விமர்சித்துள்ளார்.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள கோம் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக பள்ளி மாணவிகள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வயிற்றுவலி, தலைவலி, வாந்தி, மூச்சு விடுவதில் சிரமம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவ பரிசோதனையில் அவர்களின் உடலில் நஞ்சு இருப்பது தெரியவந்தது. ஈரானின் கல்வி அமைச்சகமும் மாணவர்கள் விஷம் குடித்ததை உறுதிப்படுத்தியது.
சிறுமிகளை படிக்க விடாமல் இருக்க மத அடிப்படைவாதிகள் விஷம் வைத்து கொன்றதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் சர்வதேச கவனத்தைப் பெற்றது. இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி, “நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் சதி திட்டம் இது. இதன் மூலம் நமது எதிரிகள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அச்சத்தையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். கூறினார்.
அந்த எதிரிகள் யார் என்று அவர் கூறவில்லை. இருப்பினும், ஈரான் எப்போதும் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் குற்றம் சாட்டும். இதனையடுத்து இம்முறை ரெய்சி மறைமுகமாக பேசுவதாக மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.