Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மழை காரணமாக இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

மழை காரணமாக இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

By: vaithegi Tue, 20 June 2023 10:15:39 AM

மழை காரணமாக இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுவதம் காரணமாக, நேற்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவள்ளூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர்,

இதனை அடுத்து கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாளர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்தது. எனவே இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நேற்று கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

holidays,rain,schools ,விடுமுறை,மழை ,பள்ளிகள்

இதையடுத்து நேற்று இரவு வரை தொடர்ந்து மழை பெய்த நிலையில் தற்போது மழையின் தாக்கம் குறைந்து உள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வழக்கம் போன்று பள்ளிகள் இயங்கும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

எனினும் கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அவர்கள் உத்தரவிட்டு உள்ளார்.

Tags :
|