Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் நாளை (சனிக்கிழமை) இயங்கும்

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் நாளை (சனிக்கிழமை) இயங்கும்

By: vaithegi Fri, 18 Nov 2022 10:05:56 AM

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் நாளை (சனிக்கிழமை) இயங்கும்


சென்னை : நாளை வேலை நாள் .... நாடு முழுவதும் கடந்த அக்டோபர் 24ம் தேதி திங்கள் கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.

தீபாவளி பண்டிகை கடந்த மாதம் (அக்டோபர்) 24-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரும்புவதற்கு ஏதுவாக, தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை வழங்க ஆசிரியர் சங்கங்கள் உள்பட பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்தன.

இதனையடுத்து தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பி ஊருக்கு வர எளிதாக இருக்கும் வகையில் தீபாவளிக்கு மறுநாள் அதாவது செவ்வாய் கிழமை பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது.

schools,colleges ,பள்ளிகள், கல்லூரிகள்

விடுமுறை அறிவிக்கும் போதே, அந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் நவம்பர் 19ம் தேதி வேலைநாளாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அந்த வேலை நாள் நாளை வரவுள்ள நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், தீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 25ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டது ஈடும் செய்யும் வகையில் நாளை பணி நாளாக அறிவித்து உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது . எனவே அரசு அறிவித்தபடி, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் நாளை (சனிக்கிழமை) இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது







Tags :