Advertisement

இங்கு நாளை (சனிக்கிழமை) பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்

By: vaithegi Fri, 10 Mar 2023 5:53:50 PM

இங்கு நாளை (சனிக்கிழமை) பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்

சென்னை: தமிழகத்தில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பெய்ய தொடங்கிய கனமழை டிசம்பர் வரையிலும் பரவலாக பெய்தது. இதையடுத்து இந்த மழையின் காரணமாக கடலோர மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. சாலைகளில் தேங்கிய மழை நீரால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு ஆளாகினர்.

எனவே இதை கருத்தில் கொண்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த மழை கால விடுமுறை மற்றும் உள்ளூர் விடுமுறைகளை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

schools,chennai,thiruvallur,kanchipuram ,பள்ளிகள் , சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,


அந்த வகையில் நாளை சென்னை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சென்னையில் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திங்கட்கிழமை பாடவேளையில் வகுப்புகள் நடைபெறும். அதே போன்று காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளிலும் நாளை திங்கட்கிழமை பாட வேளையை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் அரசு பொதுத்தேர்வை மாணவர்கள் எளிதாக எழுத வழிகாட்டும் நோக்கில் நாளை அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க / உயர் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags :