சிக்கமகளூரில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை
By: vaithegi Wed, 06 July 2022 11:17:57 AM
சிக்கமகளூர் : தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கர்நாடகத்தின் பல பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது.அந்த வகையில் சிக்கமகளூரு மாவட்டத்தில் சிக்கமகளூரு, கலசா, மூடிகெரே, தரிகெரே, என்.ஆர்.புரா, கடூர் ஆகிய தாலுகாக்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டுகிறது.
இதனால் அம்மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை கொட்டுவதால்,பல பகுதிகளில் சாலைகளில் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கனமழை காரணமாக முடிகெரே, கொப்பா, சிருங்கேரி, கலசா, என்.ஆர்.புரா மற்றும் சிக்கமகளூரு தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று முதல் ஜூலை 9 வரை விடுமுறை என சிக்கமகளூரு துணை ஆணையர் கே.என்.ரமேஷ் அவர்கள் அறிவித்துள்ளார்.
இருந்தாலும் சிக்கமகளூரு தாலுக்காவின் அம்பலே மற்றும் லக்யா ஹோப்ளிகளில் உள்ள பள்ளிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து சிக்கமகளூரு துணை ஆணையர் ரமேஷ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாவட்டத்தில் உள்ள தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தும்.