Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தெலங்கானாவில் நாளை பிற்பகல் முதல் பள்ளிகளுக்கு விடுமுறை

தெலங்கானாவில் நாளை பிற்பகல் முதல் பள்ளிகளுக்கு விடுமுறை

By: vaithegi Thu, 14 Sept 2023 2:59:07 PM

தெலங்கானாவில் நாளை பிற்பகல் முதல் பள்ளிகளுக்கு விடுமுறை

தெலங்கானா : தெலுங்கானாவில் TS TET தேர்வு குறித்த அறிவிப்பு ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியிடப்பட்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16ஆம் தேதி வரையிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இந்த நிலையில், மாநிலம் முழுவதும் தேர்வுக்கு 2.63 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கும் நிலையில் இன்று 2 தாள்களாக தேர்வு நடைபெற இருக்கிறது. அதாவது, TS TET முதல் தாள் காலை 9.30 மணி முதல் மதியம் 12:30 வரையிலும், இரண்டாம் தாள் மதியம் 2:30 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நடைபெறயிருக்கிறது.

telangana,holiday,school ,தெலங்கானா,விடுமுறை

மேலும், TS TET தேர்வு நாளை நடைபெற இருக்கும் நிலையில் டெட் தேர்வுக்கான தேர்வு மையங்களாக தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

அதாவது, தேர்வு மையங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பள்ளிகளில் டெட் தேர்வுக்கான வேலைப்பாடுகள் இன்று நடைபெறும் என்பதால் இன்று பிற்பகல் முதல் அரை நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் பின், நாளையும் தேர்வு மையமாக உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விடுமுறை என தெலுங்கானா அரசு அறிவித்து உள்ளது.

Tags :