Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இடைவிடாது கனமழை...தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

இடைவிடாது கனமழை...தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

By: vaithegi Thu, 04 Aug 2022 10:21:04 AM

இடைவிடாது கனமழை...தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

தேனி: தேனி மாவட்டத்தில் கடந்த 1 வாரமாகவே கன மழை பெய்து கொண்டு வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள வைகை, சோத்துப்பாறை, மஞ்சளாறு ஆகிய அணைகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இந்த அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை ஒன்று விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் இரவிலும் விடாமல் கொட்டித் தீர்த்தது. இன்று காலையிலும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் முரளிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

holiday,heavy rain,honey ,விடுமுறை,கனமழை,தேனி

மேலும் இதே போல் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வில்பட்டி, அட்டுவம்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, செண்பகனூர், அப்சர்வேட்டரி, பிரகாசபுரம், வட்டக்கானல், பெருமாள்மலை போன்ற பகுதிகளில் நேற்று மாலை முதல் இடைவிடாது கன மழை பெய்து கொண்டு வருகிறது.

இதனால் அருவிகள் மற்றும் நீரோடைகளில் நீர் வரத்து அதிகரித்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலையிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் கொடைக்கானலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார். இதே மாதிரி திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை பகுதியிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :