Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் உள்ள பள்ளிகள் ஜூன் 23ல் திறப்பு

புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் உள்ள பள்ளிகள் ஜூன் 23ல் திறப்பு

By: vaithegi Tue, 21 June 2022 5:53:50 PM

புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் உள்ள பள்ளிகள் ஜூன் 23ல் திறப்பு

புதுச்சேரி: இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகள் கொரோனா தொற்று காரணமாக சரிவர இயங்கப்படவில்லை. அதனால் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டு 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயமாக பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று அரசு திட்டமிட்டது.

அதே போல் அனைத்து மாநிலங்களிலும் பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி புதுவையிலும் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுக்குரிய கால அட்டவணை வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து புதுவையில் அறிவித்தபடி 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்து முடிவடைந்த நிலையில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கடந்த ஜூன் 13ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

schools,general examination,students ,பள்ளிகள் ,பொதுத்தேர்வு,மாணவர்கள்

இதனை தொடர்ந்து 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ம் தேதியும் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது புதுச்சேரியிலும் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பில், புதுவை மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் 1 முதல் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற ஜூன் 23ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது போல் புதுவையிலும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :