Advertisement

தெலுங்கானாவில் பள்ளிகள் நாளை முதல் அரை நாள் மட்டுமே

By: vaithegi Tue, 14 Mar 2023 1:50:21 PM

தெலுங்கானாவில் பள்ளிகள் நாளை முதல் அரை நாள் மட்டுமே

தெலுங்கானா: இந்தியா முழுவதும் தற்போது 10, 12-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு 2022 – 2023 ம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று கொண்டு வருகிறது. இந்நிலையில் தெலுங்கானாவில் கோடை வெப்பம் உயர்ந்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் மார்ச் 15 முதல் அரை நாள் மட்டுமே செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதையடுத்து இது குறித்து அந்த மாநில பள்ளிக்கல்வி இயக்குனர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நாளை முதல் காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மட்டுமே செயல்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு 12. 30 மணியளவில் வழக்கம் போன்று பள்ளிகளில் மதிய உணவு அளிக்கப்படும்.

schools,telangana ,பள்ளிகள் ,தெலுங்கானா

மேலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 3 -ம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. இதனையடுத்து பொதுத்தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளில் மட்டும் மாணவர்களுக்கு வகுப்புகள் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தேர்வுகள் முடிவடைந்த பிறகு ஏப்ரல் 25-ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும். மீண்டும் பள்ளிகள் ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டு புதிய கல்வியாண்டு தொடங்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.

Tags :