1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறப்பு
By: vaithegi Tue, 13 June 2023 1:06:50 PM
சென்னை: தமிழகத்தில் 1 முதல் 5 -ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்பட இருக்கும் நிலையில், பாட புத்தகங்கள் வழங்குவது தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் தீவிர .....
தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்தது. ஆனால், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததன் காரணத்தினால் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையின் அடிப்படையில் 6 முதல் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் , 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்பட இருக்கும் நிலையில் மாணவர்களை வகுப்பிற்கு வரவேற்க ஆசிரியர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.
மேலும், மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்த முதல் நாளே பாட புத்தகங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் தீவிர படுத்தப்பட்டு வருகிறது. மேலும், மாணவர்களுக்கான சத்துணவிற்கும் ஏற்பாடு செய்ப்பட்டிருக்கிறது.
இதையடுத்து நீண்ட நாள் கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால் மாணவர்களும் பள்ளிக்கு செல்வதில் மிக ஆர்வமாக இருந்து வருவதாக பெற்றோர்கள் தரப்பில் அறிவித்து உள்ளனர்.