Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விடுமுறை நாட்களை ஈடு செய்யும் வண்ணம் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும்

விடுமுறை நாட்களை ஈடு செய்யும் வண்ணம் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும்

By: vaithegi Sat, 05 Nov 2022 7:01:19 PM

விடுமுறை நாட்களை ஈடு செய்யும் வண்ணம் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும்

சென்னை: சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் ... தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தொடங்கும் வடகிழக்கு பருவ மழையானது டிசம்பர் வரை நீடிக்கும். அந்த வகையில் நடப்பு ஆண்டு கடந்த அக்டோபர் மாதத்தின் இறுதியில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியது.

கடந்த ஒரு வாரமாக தொடரும் இந்த மழையால் சென்னை, திருவாரூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை நீர் தேங்கி வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. இதையடுத்து இந்நிலையில் வங்க கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

schools,holidays ,பள்ளிகள் ,விடுமுறை

இதனால் தமிழகம் முழுவதும் கனமழை பெய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இத்தொடர் மழையின் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் முடங்கியுள்ளனர். சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சில இடங்களில் மழை நீருடன் கழிவு நீரும் கலப்பதால் நோய் தொற்று பரவும் அச்சமும் நிலவுகிறது.

இத்தகைய சூழலில் மிக கனமழை பெய்யும் மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கொண்டு வருகின்றனர். இதனையடுத்து இந்த விடுமுறை நாட்களை ஈடு செய்யும் வண்ணம் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார். மாணவர்களின் கற்றலில் இடைவெளி ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags :