Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த மாநிலத்தில் வெயில் காரணமாக பள்ளிகளுக்கு ஏப்ரல் 16 ஆம் தேதி வரை விடுமுறை

இந்த மாநிலத்தில் வெயில் காரணமாக பள்ளிகளுக்கு ஏப்ரல் 16 ஆம் தேதி வரை விடுமுறை

By: vaithegi Wed, 12 Apr 2023 3:50:48 PM

இந்த மாநிலத்தில் வெயில் காரணமாக பள்ளிகளுக்கு ஏப்ரல் 16 ஆம் தேதி வரை விடுமுறை

ஒடிசா : இந்தியாவில் வழக்கமாக மே மாதம் கோடை வெயில் மிகவும் உக்கிரமாக இருக்கும். ஆனால் இந்தாண்டு மார்ச் ஏப்ரல் மாதங்களில் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கிறது. மேலும் தற்போது அனைத்து பள்ளிகளிலும் முழு ஆண்டு தேர்வு நடைபெறுகிறது.

இதையடுத்து இந்த வெயில் தாக்கத்தால் குறிப்பாக தொடக்கப்பள்ளி மாணவர்கள் சிரமத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் ஒடிசா மாநில அரசு வெயில் காரணமாக மாணவர்களுக்கு நல்ல செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

vacation,sun,students ,விடுமுறை,வெயில் ,மாணவர்கள்

அதன் படி அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் ஏப்ரல் 12 -ஆம் தேதி முதல் 16 -ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.ஆனால் இந்த அறிவிப்பு 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து 11- ஆம் வகுப்பு மற்றும் 12 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம் போல வகுப்புகள் நடைபெறும் எனவும், அந்த மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

Tags :
|