Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இங்கிலாந்தில் செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் - போரிஸ் ஜான்சன் வலியுறுத்தல்

இங்கிலாந்தில் செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் - போரிஸ் ஜான்சன் வலியுறுத்தல்

By: Karunakaran Mon, 10 Aug 2020 09:23:54 AM

இங்கிலாந்தில் செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் - போரிஸ் ஜான்சன் வலியுறுத்தல்

சீனாவில் உள்ள வுகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலால் பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தின. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.

தற்போது, இங்கிலாந்தில் செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார். கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இங்கிலாந்தில் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது இங்கிலாந்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், இனி மேலும் பள்ளிகளை மூடுவது நல்லதல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.

school open,uk,boris johnson,england ,பள்ளி திறப்பு, இங்கிலாந்து, போரிஸ் ஜான்சன், இங்கிலாந்து

இதுகுறித்து போரிஸ் ஜான்சன் கூறுகையில், பள்ளிகளில் மாணவர்கள் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி போன்ற பாதுகாப்பான விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். மாணவர்களின் பள்ளிப் படிப்பு தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. இனி ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டாலும் பள்ளிகள் மூடல் என்பது கடைசி பட்சமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், மாணவர்கள் தங்கள் கல்வியை தவறவிட்டால் நாடு பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்ளும். எனவே கொரோனா பரவல் முற்றிலும் குறையாமல் இருந்தாலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து பள்ளிகளில் மாணவர்கள் தங்கள் படிப்பினை தொடர வேண்டும் என்று கூறினார்.

Tags :
|