Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு : அரசு பேருந்துகள் முழு அளவில் இயக்கம்

தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு : அரசு பேருந்துகள் முழு அளவில் இயக்கம்

By: Nagaraj Sun, 12 June 2022 11:19:41 PM

தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு : அரசு பேருந்துகள் முழு அளவில் இயக்கம்

சென்னை:தமிழகத்தில் நாளை முதல், அரசு பஸ்களை முழு அளவில் இயக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: பள்ளிகள் திறக்கும் போது, மாணவர்களின் வருகை, அரசு பஸ்களில் அதிகமாக இருக்கும்.

எனவே, தேவைக்கு ஏற்றார்போல், அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைத்து கிளை மேலாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளோம்.அரசு பஸ் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் தேவையற்ற விடுப்பு இன்றி, பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

schools opening,buses,completeness,movement,government ,பள்ளிகள் திறப்பு, பஸ்கள், முழுமை, இயக்கம், அரசு

முழு அளவில் பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.'நாளை பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில், பழைய பஸ் பாஸ், சீருடையுடன், மாணவர்கள், அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம். டிக்கெட் எடுக்கும்படி வலியுறுத்தக் கூடாது' என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

மேலும், பஸ்களின் படிக்கட்டுகளில் தொங்கியப்படி பயணம் செய்து, மற்ற பயணியருக்கு இடையூறு செய்யும் மாணவர்கள் மீது, காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்றும், பஸ் ஓட்டுனர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.


Tags :
|