Advertisement

டில்லியில் வரும் 31ம் தேதி வரை பள்ளிகள் திறப்பு இல்லை

By: Nagaraj Sun, 04 Oct 2020 5:49:13 PM

டில்லியில் வரும் 31ம் தேதி வரை பள்ளிகள் திறப்பு இல்லை

31ம் தேதி வரை பள்ளிகள் திறப்பு இல்லை... டில்லியில் கொரோனா தொற்று காரணமாக அக்டோபர் 31-ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 5-ஆம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டில்லியில் அனைத்து விதமான பள்ளிகளும் அக்டோபர் 31-ஆம் தேதி வரை திறக்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.

schools opening,no,oct. 31,corona,spread ,பள்ளிகள் திறப்பு, இல்லை, அக்டோபர் 31ம் தேதி, கொரோனா, பரவல்

கொரோனா தொற்று காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன. கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் சுகாதாரத்துறை ஈடுபட்டு வரும் நிலையில், ஊரடங்கில் ஒருசில தளர்வுகளும் அளிக்கப்பட்டன.

மத்திய அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி அக்டோபர் 5-ஆம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று டில்லி அரசு அறிவித்திருந்தது. எனினும் டில்லியில் கொரோனா பரவல் விகிதம் குறையாததால், அக்டோபர் 31-ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

Tags :
|
|