Advertisement

நாளை பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்

By: vaithegi Fri, 16 Dec 2022 4:01:21 PM

நாளை பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்

சென்னை: பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் ... தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மாண்டஸ் புயலாக மாறியது. இப்புயல் தீவிர புயலாக வலுவடைந்து மாமல்லபுரம் அருகே கடந்த 9ம் தேதி கரையை கடந்தது. இதனால் வட தமிழகம், புதுச்சேரிக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் இதில் குறிப்பாக சென்னையில் விடிய விடிய கனமழை பெய்தது.

அதனால் மாணவர்களின் நலன் கருதி பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

schools,holidays ,பள்ளிகள் ,விடுமுறை

இதனை அடுத்து தற்போது 9ம் தேதி அளிக்கப்பட்ட விடுமுறை தினத்தை ஈடு செய்யும் விதமாக நாளை சென்னையில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்துடன் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் வெள்ளிக்கிழமை பாடத்திட்டத்தின்படி செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் திருவள்ளுர் மாவட்டத்தில் நவம்பர் 2ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதை ஈடு செய்யும் விதமாக நாளை அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :