Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் ஒரு கோடியாவது பெட்டகத்தை பெறும் நபர் தேர்வு

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் ஒரு கோடியாவது பெட்டகத்தை பெறும் நபர் தேர்வு

By: Nagaraj Wed, 21 Dec 2022 10:01:57 PM

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் ஒரு கோடியாவது பெட்டகத்தை பெறும் நபர் தேர்வு

திருச்சி: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் ஒரு கோடியாவது பெட்டகத்தை பெறும் நபர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது அவர் கூறியதாவது:

கடந்த 2021 ஆகஸ்ட் 5-ஆம் தேதி மக்களை தேடி மருத்துவம் முதல்வர் ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. இந்நிலையில் அந்தத் திட்டத்தின் மூலம் மக்கள் தொடர்ந்து பயனடைந்து வந்த நிலையில் தற்போது அது ஒரு கோடியை எட்டியுள்ளது. இதற்காக ஒரு கோடியாவது பெட்டகத்தை பெறும் நபர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதில் திருச்சி மாவட்டம் சன்னாசிப்பட்டியை சேர்ந்த அந்த நபருக்கு முதல்வர் ஸ்டாலின் மருத்துவ பெட்டகத்தை வருகிற 29-ஆம் தேதி நேரில் வழங்க உள்ளார்.

இதனையடுத்து தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தாக்கம் ஒற்றை இலக்கத்தில் உள்ளது. கடந்த ஏழு, எட்டு மாதங்களாக உயிரிழப்புகளும் இல்லாத நிலையில்தான் இருக்கிறது. அதற்குக் காரணம் தடுப்பூசி செலுத்துவதை ஒரு இயக்கமாக தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றியதுதான். தொடர்ந்து கொரோனா குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீர்காழியை சேர்ந்த 13 வயது மாணவி அபிநயா தோல் அழுகல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அபிநயா முதல்வருக்கு கோரிக்கை விடுத்த வீடியோ இணையத்தில் வைரலானது. இது எங்கள் கவனத்திற்கு வந்த பின் அபிநயாவை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பத்திரிகைகள், ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் இது போன்ற கோரிக்கைகள் வரும் பட்சத்தில் அவை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 2019-ல் எந்த நிலையில் இருந்ததோ? அதே நிலையில் தான் தற்போதும் இருக்கிறது.

விரைவாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட வேண்டும் கோவையில் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றோம். 2024- ஆம் ஆண்டு தேர்தலை மையப்படுத்தி ஒன்றிய அரசு மருத்துவமனையை கட்ட முயற்சி செய்தாலும் தேர்தலுக்காக செய்தாலும் அதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என கூறியுள்ளார்.

Tags :
|