Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாம் கட்ட முகாம்கள்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாம் கட்ட முகாம்கள்

By: Nagaraj Sun, 06 Aug 2023 7:09:06 PM

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாம் கட்ட முகாம்கள்

சென்னை: 2ம் கட்ட முகாம்கள் தொடக்கம்... கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், விண்ணப்பிக்க இரண்டாம் கட்ட முகாம்கள் நேற்று தொடங்கின.

இதற்காக, 14 ஆயிரத்து 500 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஏற்கெனவே முதல்கட்ட முகாம்கள் ஜூலை 24-இல் தொடங்கி ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்த முகாம்களின் வழியாக 80 லட்சத்துக்கும் மேற்பட்ட பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில், 2-ஆம் கட்ட முகாம்கள் மாநிலம் முழுவதும் தொடங்கியுள்ளன. இதில் விண்ணப்பதாரா்கள் எடுத்து வரும் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தன்னாா்வலா்கள் இணையதளத்தில் பதிவு செய்து வருகின்றனா். கணினி இணைப்பு சரியாக இல்லாத இடங்களில் விவரங்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளன. அதன்பிறகு, அவை இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் நேற்று இரவு வரை நடைபெற்றன.

Tags :